பீஹாரில் முன்னோடி அரசியல்வாதியாக திகழ்ந்த கர்பூரி தாக்கூர், சமத்துவத்தை கொள்கையாக ஏற்று உழைத்தது பற்றி கூறும் நுால்.
காந்திஜி முன்னெடுத்த, ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஈடுபட்டது, எளிய மக்கள் வளர்ச்சிக்கு தாய்மொழிக் கல்வியே சிறந்தது என ஆட்சி காலத்தில் செயல்படுத்தியதை எடுத்துரைக்கிறது.
ஏழை குடும்பத்தில் பிறந்து மருத்துவத் தொழிலுடன், முடி வெட்டுவதையும் செய்து வந்தவர், பாரத ரத்னா விருது பெற்றது பெருமிதத்துடன் பதிவாகியுள்ளது. பீஹார் அரசியலில் மாற்றத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த கர்பூரி தாக்கூர் வாழ்க்கையை அறிந்துகொள்ளும் வகையில் எளிமையாக வழங்கியுள்ளது. எல்லாரையும் கவரும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்