இசைத் தமிழுக்கு புத்துயிர் அளித்த கலைஞரின் வாழ்க்கை வரலாற்று நுால். அவரது மகனே ஆவணம் ஆக்கியுள்ளார்.
தமிழகம் அபிராமத்தில் பிறந்தவர் ராஜூ. இவர் கப்பலில் பர்மாவில் வியாபாரம் செய்தது பற்றி கூறப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசை கற்ற விபரத்தை தெளிவாக தருகிறது.
தமிழ் இசையில் ஆர்வம் கொண்டதை விவரிக்கிறது. பறவை, மிருகங்கள் ஒலியில் இருந்தே இசையின் அடிப்படை தோன்றியதாக அவர் செய்துள்ள வியப்பான ஆய்வு பற்றி உள்ளது. பொது மேடை, கோவில் விழாக்களில் பாடியது பற்றியும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழிசையை வளர்த்த வரலாற்றை தெளிவுடன் பதிவு செய்துள்ளது. தமிழிசையின் வளர்ச்சி வரலாறாக உள்ள நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்