திருவருட் பிரகாச வள்ளலாரின் புகழ்பாடும் நுால்.
இல்லற வாழ்வுடன் துறவறத்தை சுவாசித்த விபரங்களை, சுத்தானந்த பாரதி சொல்லாட்சியால் புலப்படுத்துகிறது. வடலுாரில் வசித்ததால் அதற்கு நித்திய புகழ் கிடைத்துள்ளதை கூறி பெருமிதப்படுத்துகிறது. தமிழுக்கு ஆன்மிக மொழி என்ற சிறப்பை உருவாக்கிய விதத்தை எடுத்தியம்புகிறது.
வேண்டாம் என்பதை வேண்டும் என்று பாடிய வள்ளலாரின் புலமையை மெச்சுகிறது. முருகன் பெருமையை பாடல்களில் அறிமுகம் செய்கிறது. மூடத்தனத்தை விலக்கும் வகையில் செயலாற்றியதை பெருமைப்படுத்துகிறது. முதியோர் பாடசாலை கண்டதை பெருமையுடன் குறிப்பிடுகிறது. வள்ளலார் பற்றிய செய்திகளை இனிப்பாய் தந்துள்ள நுால்.
– சீத்தலைச்சாத்தன்