குறட்பா அறங்களை மையப்படுத்தியுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிறுவர் – சிறுமியருக்கு அறிவூட்டும் வகையில் மிகவும் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது. எல்லா காலத்துக்கும் பொதுவான ஒன்றாக அறக்கோட்பாட்டை காட்டுகிறது.
தற்கால நிலையை சித்தரிக்கும் கதாபாத்திரங்கள் வழியாக கதைகள் புனையப்பட்டுள்ளன. வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பாலின சமத்துவம், மத, வர்க்க பேதம் களைதல் போன்றவை மையக்கருத்தாக அமைந்து உள்ளன. இயல்பாக கதைகளை நகர்த்துவது, கவரும் வகையில் உள்ளது.
சமத்துவ எண்ணத்துடன் நவீன வாழ்வுக்கு சிறுவர்களை தயார்படுத்தும் நுால்.
– மலர்