புகழின் உச்சியை அடையும் ஏழை மாணவனை மையமாக்கப்பட்ட நாவல் நுால்.
விவசாயக் கூலியாக இருக்கும் ஏழை பெற்றோருக்கு பிறந்தவன் லோகநாதன். கிராம பள்ளியில் படித்து தேர்வில் முதன்மை பெற்றதால், அரசு ஒதுக்கீட்டில் மெட்ரிக் பள்ளியில் சேர்கிறான். அங்கு படும் அவலங்கள் பின்னப்பட்டுள்ளன.
கல்லுாரி படிப்பின்போது ஆலங்குச்சி பிரஷாகவும், களிமண்ணை சோப்பாகவும் பயன்படுத்தி, பரோட்டா கடையில் வேலை செய்து, குடும்பத்துக்கு உதவி கலெக்டராகி சாதிப்பதை கூறுகிறது. முன்னேற்றப் பாதையை நெகிழ்ச்சியுடன் படைத்துள்ள நாவல்.
– புலவர் சு.மதியழகன்