இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராளிகளை அறிமுகம் செய்யும் நுால். பல துறையிலும் போராடியோர் குறித்த தகவல்களை தருகிறது.
சுற்றுச்சூழல் போராளிகள் சந்திக்கும் பிரச்னைகளின் தீவிரத்தை விளக்குகிறது. தொடர்ந்து, மரபணு மாற்ற விதைகளால் ஏற்படும் விளைவுகளை அம்பலப்படுத்துகிறது. போராளி வந்தனா சிவா துவங்கி, வன்னி மரத்துக்காக உயிர் துறந்த அம்ரிதா தேவி வரை தீவிர பணிகள் குறித்து எடுத்துரைக்கிறது.
இறுதி பகுதியில் நீர்வளம் மற்றும் மாசு, வேளாண் துறை சந்திக்கும் பிரச்னைகளின் தீவிரம், கழிவு மேலாண்மை சார்ந்த சிக்கல்கள் தனித்தனி கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் குறித்தும் தெரிவிக்கும் நுால்.
– ராம்