முயற்சியை வெற்றியாக்க, மகிழ்ச்சியுடன் வாழ, உழைப்பில் நேர்மையாக இருக்க வழிகாட்டும் தன்னம்பிக்கை நுால்.
வெற்றியை அடைய எதுவரை ஓட வேண்டும் என கூறுகிறது. புத்தியுள்ளோர் வெற்றியாளராக மாறுவதில் உள்ள சிக்கல்களை பகிர்கிறது. விளைவுகள் குறித்து யோசிக்காமல், உணர்வு மிகுதியால் செயல்படும்போது, நோக்கம் வெற்றியடையாது என்கிறது. திறனுள்ளோரிடம் கற்க வேண்டிய பாடத்தை சொல்கிறது.
அதிகம் படித்தோரிடம் இருக்கும் செயல்திறனைஒப்பிட்டு பகிர்கிறது. சவாலான சூழல்களை கையாண்டு வெற்றியாளர்களாக மாறியோரை பட்டியலிடுகிறது. சலிப்பு, கோபம், நாவடக்கமின்மை பின்தங்க வைக்கும் என எச்சரிக்கிறது. பதற்றமான வேளையிலும், தெளிவாக பேசி, செயலை முடிக்க கற்பிக்கும் நுால்.
டி.எஸ்.ராயன்