கி.வா.ஜெகந்நாதன் எழுதிய 14 கவிதைகள் குறித்து விளக்கியுள்ள நுால். நுாறு ஆண்டுகளுக்கு முன் நிலவிய அரசியல் சூழ்நிலையை விவரிக்கின்றன. அப்போதைய நிலையை தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளன.
புதுச்சேரியிலிருந்து வெளியான, ‘கற்பகம்’ மாத இதழில் எழுதிய கவிதைகள் இடம் பெற்று தேசபக்தியை ஊட்டுகின்றன. நாடு சுதந்திரம் அடையும் முன் எழுதப்பட்டது. இதில், கி.வா.ஜெகந்நாதனுக்கு வந்த கடிதங்களையும் சேர்த்துள்ளது சுவாரசியமாக உள்ளது.
விடுதலை என்ற தலைப்பிலான கவிதையில், அக்காலத்தில் ஆங்கிலேயரிடம் நாடு அடிமைபட்டு இருந்ததையும், மக்கள் மனநிலையும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. படிக்கத் துாண்டும் கவிதை நுால்.
--– முகில்குமரன்