பழங்காலத் தமிழ் நடையில் ஜோதிட தகவல்களை கூறும் புத்தகம்.
ஜோதிட கணிதத்தை எப்படி ஆராய்ந்து பலன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை விரிவாக, ஏராளமான அட்டவணைகளின் துணையோடு தெரிவிக்கிறது. ஸ்புடங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பலாபலன்களை அறியும் முறைக்கான வழிகள் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இம்முறைகளின் மூலம் கணக்கிடப்படும் பலாபலன்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. ஜோதிடத்தில் திரிகால வர்த்தமானங்களை அறியலாம் என்று உறுதி கூறுகிறது. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் எப்படி இருப்பர் என ஆச்சரியமூட்டும் தகவல்களை சொல்கிறது. மண்ணுலக வாழ்வு, வானுலக கிரகங்களால் தீர்மானிக்கப்படுவதாக எடுத்துக்காட்டும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்