முகப்பு » வரலாறு » வைகைக் கரை வரலாற்றுச்

வைகைக் கரை வரலாற்றுச் சுவடுகள்

விலைரூ.180

ஆசிரியர் : கம்பம் சோ.பஞ்சுராஜா

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வைகை நதி பாயும் பாண்டிய நாட்டு வரலாற்றை விவரிக்கும் நுால்.

மதுரை மாவட்ட சிறப்பையும், பண்டைய தமிழர் நாகரிக முன்னேற்றத்தையும் தெரிவிக்கிறது. ஆதிச்சநல்லுார் அகழாய்வு தகவல்களை சொல்கிறது. திண்டுக்கல் மலையில் கோட்டை கட்டிய வரலாறும் உள்ளது. இது, ராணுவத் தளமாக விளங்கியதாக குறிப்பிட்டுள்ளது.

கடல் கடந்த நாடுகளிலும் தமிழர் நாகரிகம் பரவியிருந்தது பற்றி உரைக்கிறது. நெடியோன் என்ற நிலந்தரு பாண்டியன் அவைக்களத்தில், தொல்காப்பியம் அரங்கேறியதாக தெரிவிக்கிறது.

பாண்டிய நாட்டு முத்துகளை பெற, ரோமாபுரியில் இருந்து தங்கம் எடுத்து வந்த தகவலை தருகிறது. வரலாற்று ஆய்வாளர்களுக்கு உகந்த தகவல் களஞ்சியமாக மலர்ந்துள்ள நுால்.

– பேராசிரியர் ரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us