வைகை நதி பாயும் பாண்டிய நாட்டு வரலாற்றை விவரிக்கும் நுால்.
மதுரை மாவட்ட சிறப்பையும், பண்டைய தமிழர் நாகரிக முன்னேற்றத்தையும் தெரிவிக்கிறது. ஆதிச்சநல்லுார் அகழாய்வு தகவல்களை சொல்கிறது. திண்டுக்கல் மலையில் கோட்டை கட்டிய வரலாறும் உள்ளது. இது, ராணுவத் தளமாக விளங்கியதாக குறிப்பிட்டுள்ளது.
கடல் கடந்த நாடுகளிலும் தமிழர் நாகரிகம் பரவியிருந்தது பற்றி உரைக்கிறது. நெடியோன் என்ற நிலந்தரு பாண்டியன் அவைக்களத்தில், தொல்காப்பியம் அரங்கேறியதாக தெரிவிக்கிறது.
பாண்டிய நாட்டு முத்துகளை பெற, ரோமாபுரியில் இருந்து தங்கம் எடுத்து வந்த தகவலை தருகிறது. வரலாற்று ஆய்வாளர்களுக்கு உகந்த தகவல் களஞ்சியமாக மலர்ந்துள்ள நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்