முஸ்லிம் இசை கலைஞரான இனாயத் கான் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக தரும் நுால்.
வகுப்பில் பாடங்கள் படிப்பதை விட செய்யுள், கவிதை இயற்றி முதன்மையாகத் திகழ்ந்ததை குறிப்பிடுகிறது. தன் இனத்தில் இசை கூடாது என்ற கருத்தை மறுக்கும் விதமாக, உலகம் முழுதும் பயணம் செய்ததை எடுத்துரைக்கிறது. இசைக்குடும்பம், தெய்வீகக் குழந்தை, சில அற்புத அனுபவங்கள், இளமைக்கால பயணங்கள் என, 10 தலைப்புகளில் அமைந்துள்ளது.
கடவுள் வழிபாட்டில் சீர்திருத்தக் கருத்துகள் வகுத்ததை எடுத்துரைக்கிறது. விநாயகரை பாடியதற்கு மன்னரிடம் பரிசும் பெற்றதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கை வரலாற்றை எழுதும் முறையை கற்பிக்கிறது. பிரபல இசைஞானி இனாயத் கான் வாழ்வை அறிய உதவும் நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்