இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த போர்கள் பற்றிய நுால். நேரடியாகவும், மறைமுகமாகவும் நடந்த ஐந்து தாக்குதல் நிகழ்வுகளை விவரிக்கிறது. உறவில் ஏற்பட்ட விரிசலின் வேர்களை ஆராய்ந்துள்ளது.
அமைதி மற்றும் வளர்ச்சி நோக்கில் போர்த் தொடர்பான தகவல்கள் தரப்பட்டு உள்ளன. நம் ராணுவத்தின் மனிதாபிமான செயல்பாடுகள் குறித்து கூறப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
போர்களின் போது நடந்த சுவாரசியமான சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. போர்களில் ராணுவ ரகசிய தகவல் தொடர்புக்கு தமிழ் மொழி பயன்பட்ட விதத்தையும் எடுத்துரைக்கிறது. நம் நாட்டின் மீது மதிப்பையும் பற்றுதலையும் ஏற்படுத்தும் விதமாக தகவல்கள் உடைய நுால்.
– ராம்