திருநெல்வேலி வரலாற்று நிகழ்வுகளை சுவைபட எடுத்தியம்பும் நுால். பூர்வ காலம், மத்தியகாலம், தற்காலம் என தகவல்கள் தரப்பட்டுள்ளன.
பாளையக்காரர் கட்டப்பொம்மன் துாக்கிலிடப்பட்ட நிகழ்வை, தெளிவாக பதிவு செய்துள்ளது. ஒவ்வொரு காலத்திலும் முக்கிய நிகழ்வுகள் கதை போல் விவிரிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆதிக்கம் அதிகரித்த போது, கடும் எதிர்ப்பு இருந்ததை குறிப்பிடுகிறது.
குறுநிலங்களை ஆண்ட பாளையக்காரர் எழுச்சியை தக்க ஆவணங்கள் வழியாக எடுத்துரைக்கிறது. பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தில் கட்டபொம்மன் மீதான குற்றச்சாட்டு, விசாரணை, தண்டனை விரிவாக தரப்பட்டுள்ளது. வரலாற்றை சுவாரசியம் குன்றாமல் எடுத்துரைக்கும் நுால்.
– முகில்