காரைக்காலில் உள்ள கல்வெட்டுகள் கூறும் தகவல்களை விரிவாக விளக்கி அரிய செய்திகளை பதிவு செய்திருக்கும் நுால்.
முன்னோட்டமாக, காரைக்கால், திருநள்ளாறு பகுதி வரலாற்றுச் செய்திகளை விவரிக்கிறது. திருநள்ளாறு கல்வெட்டுகள் தரும் செய்திகளோடு கோவில் கல்வெட்டுகள் தரும் அரிய செய்திகள் வழியாக, தமிழர் பண்பாட்டின் கூறுகளை தகுந்த ஆதாரங்களோடு விளக்குகிறது.
பழங்கால மக்களின் வாழ்வியல் விழுமியங்கள், சமூகப் பொருளாதாரச் சூழல், மொழி வளர்ச்சிக்கு தகுந்த குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
பண்டைய காரைக்கால் நகரின் வரலாறு, பெருமை, நிலவியல், மூவேந்தர் ஆட்சியின் சிறப்புகளை ஆய்வின் வழி எடுத்தியம்புகிறது.
கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு பயன்தரும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு