அமைதி வழி மற்றும் ஆயுதந் தாங்கிய வழிகளில் போராடியோரின் வீரம், தியாகத்தை எடுத்துரைக்கும் நுால். இந்திய விடுதலைக்காக போராடிய காந்திஜி, நேதாஜி போன்ற தேசிய தலைவர்களின் செயல்பாடுகளை பட்டியலிடுகிறது.
ஒரே காலக்கட்டத்தில் தமிழகத்தில் இருந்து போராடிய பாரதியார், வ.உ.சி., மருதுபாண்டியர், புலித்தேவன் போன்றோர் செயல்பாடுகளையும் எடுத்து கூறுகிறது. ஒண்டிவீரன், ஆங்கிலேயருக்கு விட்ட சவால்களை, வீரத்தின் வரலாறாக எடுத்துரைக்கிறது.
மருதநாயகத்தின் முதல் தோல்வி, அதில் கிடைத்த பாடங்கள் வழியாக வீறுகொண்டு பீரங்கியால் முழங்கியதை சொல்கிறது. மூவலுார் ராமாமிர்தம், கடலுார் அஞ்சலையம்மாள் தியாகத்தை விவரிக்கிறது. இலங்கையில் தமிழர் போராட்டத்தையும் கூறும் நுால்.
– டி.எஸ்.ராயன்