இயேசுவின் வாழ்க்கையையும், போதனைகளையும் உணர வைக்கும் கருத்துள்ள நுால். ஒவ்வொரு சொல்லும், செயலும் தன்னலம் துளி கூட இன்றி, பிறர்நலம் பேணுவதற்காகவே என்பதை நிரூபித்ததை எடுத்து காட்டியுள்ளது.
அடித்து துன்புறுத்தி ஏளனப்படுத்தி சிலுவை சுமக்கச் செய்தது, ஆவியைப் பறித்தது இயேசுவுக்கு கொடுத்த தண்டனையா என்றால், இல்லை; பிறர் பாவத்திற்காக தண்டனை ஏற்று ஒப்புவித்து மாண்டதை அற்புதமாக விவரிக்கிறது.
இன்றைய வாழ்க்கை சரியான பாதையில் தான் செல்கிறதா என வினா எழுப்பி, ஏராளமான ஆதாரங்களைத் தந்து தெளிவான பாதையை காட்டுகிறது. இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை பயப்பதை எடுத்துரைக்கிறது. சீரிய கருத்துகளை தாங்கி நிற்கும், செம்மையான நுால்.
– டாக்டர் கார்முகிலோன்