முகப்பு » வாழ்க்கை வரலாறு » நாவுக்கரசரும் நாவாய்

நாவுக்கரசரும் நாவாய் நாயகரும்

விலைரூ.150

ஆசிரியர் : ஆ. அறிவழகன்

வெளியீடு: யாப்பு வெளியீடு

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஆன்ம விடுதலைக்கு பாடுபட்ட நாவுக்கரசரையும், தேச விடுதலை நாயகர் வ.உ.சிதம்பரனாரையும் ஒப்பிட்டு ஆராயும் நுால். இருவருமே பிறர் நலன் பேணுதல், சொல்லுறுதி, நெஞ்சுறுதியும் உடையோர் என்பது சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது.

அரசின் அநீதிகளை அச்சமில்லாது எதிர்த்து இருவருமே வெற்றி கண்டதை கூறுகிறது. அஞ்சுவதும் அஞ்ச வருவதும் இல்லாத இருவருமே துணிவு, பக்திநெறி சிந்தனையுடன் செயல்பட்டதை குறிப்பிடுகிறது.

குறையாத உறுதியுடன் செயல்பட்டது கூறப்பட்டுள்ளது. தேசியமும், தெய்விகமும் கலந்து இனிக்கும் நுால்.

– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us