திரைப்படங்களில் எம்.ஜி.ஆர்., பாடிய தத்துவப் பாடல்களில் மேலாண்மை கருத்துகளை எடுத்துரைக்கும் நுால்.
சிறப்பான சமுதாயம் உருவாக, திரைப்படப்பாடல்கள் வழியாக கருத்துகளை ஊட்டி விழிப்படைய வைத்ததை அறியத்தருகிறது. எம்.ஜி.ஆர்., பற்றி அறிஞர்களின் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.
படங்களில் தாய்மையை உயர்த்தி யுள்ளதற்கு விளக்கம் தருகிறது. மேலாண்மை வகுப்புகளில் கற்றுத் தரப்படும் செய்திகள், சினிமா பாடல்களில் பொதிந்து இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. படித்து, ரசித்து பயன்பெற உதவும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்