பிரபல எழுத்தாளர் சுந்தர ராமசாமி மறைவுக்கு பின், அவரது மனைவியின் வாழ்க்கை அனுபவத்தை பதிவு செய்துள்ள தன் வரலாற்று நுால்.
மகன், மகள்கள், பேரக்குழந்தைகள், நண்பர்கள், இலக்கிய விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினருடன் உள்ள நெகிழ்வை எளிமையாக உரைக்கிறது. அன்றாட போக்கில் ஏற்பட்ட தடுமாற்றத்தை மாற்றியமைத்ததை சித்தரிக்கிறது. காலை நடை பயிற்சியில் நட்புகளை தேடி வாழ்வை விரிவாக்கியது சுவாரசியம் தருகிறது.
புதிய நட்புகளுடன் இணைந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுலா சென்ற அனுபவம் சுவைபட விவரிக்கப்பட்டுள்ளது. மகள்கள் குடும்பத்துடன் நெருக்கமான அனுபவ விபரங்களும் உள்ளன. முதுமை காலத்தில் அர்த்தமுள்ள செயல்பாடுகளால் நம்பிக்கையுடன் வாழ்வதை எடுத்துரைக்கும் நுால்.
– மதி