சித்துார் ராணி பத்மினியின் தியாக வரலாற்றைக் கூறும் சீர்மிகு நாடக நுால். கூரிய வசனங்களால் கதாபாத்திரங்கள் அழியாத இடத்தை பிடித்துள்ளன.
சரித்திரச் சம்பவ பின்னணியில் உருவாக்கப்பட்டு உள்ளது. பத்மினியின் பேரழகை அறிந்து, பரிதவித்துப் போகின்றான் அலாவுதீன். பேரரசனாக தான் வீற்றிருக்க, ஒரு சிறு நாட்டின் தலைவனுக்கு, அவளை அடையும் அதிர்ஷ்டமா என்று ஆத்திரம் கொள்கிறான்.
என்ன நடந்தாலும் சரி, பத்மினி தனக்கு சொந்தமாக வேண்டும் என்று துணிகிறான். சித்துாரை முற்றுகையிட்டு, மன்னனை கடத்தி சிறையில் அடைக்க கட்டளையிடுகிறான். கணவன் உயிரை காப்பாற்ற முடிவெடுத்த பத்மினியின் போராட்டமே இந்த நாடகம். உணர்ச்சிகளை துல்லியமாக வார்த்தையில் கொடுத்துள்ள நுால்.
– டாக்டர் கார்முகிலோன்