கடந்த 50 ஆண்டு காலமாக எழுதி வருபவர் அசோகமித்திரன். தமிழ்ச் சூழலில் தனித்து நிற்கும் எழுத்து அவருடையது. ஆடம்பரங்களும், ஆரவாரங்களும், அகங்காரமும் இல்லாதது. அலைகளற்ற ஆழ்கடல் போல அமைதியானது. ஆர்ப்பரிப்புகள் அற்றது; எளிமையானது. மிக மிக எளிமையானதாகத் தோன்றி தன்னுள் பொதிந்திருக்கும் நுட்பங்களை முதல் பார்வைக்கும், சிரத்தையற்ற வாசிப்புக்கும் கூட எளிமையானது.
அந்த விதத்தில் ஹெமிங்வேயை நினைவூட்டுவது. அவரை இளந்தலைமுறையினரிடம் இத்தொகுப்பு கொண்டு செல்லும் இதே வரிசையில் நவீன தமிழ் இலக்கியத்தின் தலைச்சிறந்த படைப்பாளிகளான புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், லா.ச.ரா, ஜெயகாந்தன் உட்பட 18 எழுத்தாளர்களின் படைப்புகளையும் "அம்ருதா பதிப்பகம் கைக்கு அடக்கமான அழகிய பதிப்பாக, மலிவு விலையில் வெளியிட்டுள்ளது; பாராட்டுக்குரியது.