திருநெல்வேலி, ஸ்ரீ காந்திமதி விலாசம் பிரஸ் கி.பி., 1897ல் அச்சிட்ட புத்தகம் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜோதிடம் சம்பந்தமான தகவல் அந்தக் கால தமிழ் நடையில் அமைந்துள்ளது.
ஜோதிடக்கலையின் மேன்மையை சொல்கிறது. கிரகங்களின் ஓட்டமும், மாற்றமும் பூமியில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என அறியத் தருகிறது. அமாவாசை, பவுர்ணமி நிகழ்வுகளை விளக்குகிறது. பஞ்சாங்கத்தை புரிய வைக்கிறது.
உன்மீலனம், நிமீலனம் என்பவை பற்றி புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம். கிரகண பலன்கள், விண்ணில் நிகழ்பவை மண்ணில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என வியப்படைய வைக்கிறது. சூரிய, சந்திர கிரகண விளைவுகளையும் எடுத்துரைக்கும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்