தமிழ் மொழியின் சிறப்புகளை எடுத்து கூறும் நுால். சொற்களை முன்வைத்து தனித்தன்மையை விளக்குகிறது.
அம்மா, அப்பா, தமிழோடு பெயர், அரசாணை உட்பட, 70 தலைப்புகளில் அமைந்துள்ளது. சொற்களுக்கு பொருள் விளக்கம் தருகிறது. அருகு என்ற சொல் அகில் மரத்தை குறிப்பிடுகிறது. ஆகமன், சிவனை குறிப்பிடுகிறது.
உயிர், மெய், உயிர்மெய் என, உடலோடு பொருந்தி மொழி அமைந்திருப்பதை விளக்குகிறது. இலக்கண, இலக்கியங்களை படிக்க இந்தப் பிறவி போதாது என குறிப்பிடுகிறது. சோறு என்ற சொல்லுக்கு தமிழில், 26 சொற்கள் உள்ளதை பட்டியலிடுகிறது.
பசி போக்குவது, இன்சொல் பேசுவது போன்ற தத்துவங்களை கற்று தருகிறது. தமிழ் மொழியை பிழையின்றி பேசவும், எழுதவும் துணை செய்யும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்