அமுதா பதிப்பகம், ஏ-82, அண்ணா நகர், சென்னை-600 102. (பக்கம்: 224).
பக்குவம் என்றால் என்ன? தகுதி, பருவம், முதிர்ச்சி, ஆற்றல், ஆன்ம பரிபாகம் என்கிறது தமிழ் அகராதி என்று விளக்கும் ஆசிரியர், "ஓடுற தண்ணியில பாசி பிடிக்காது. ஆடுற கால்ல பந்தல் நிக்காது, தாவிக்கிட்டேயிருந்தால் தொழில் நிலைக்காதுன்னு' அலை பாயுற மனதிற்கு ஆலோசனைகளையும் கூறியுள்ளார்.சாமர்த்தியம், உரிமை, எது வெற்றி? படி, கருத்து, பக்குவம், உணர்வுகளை மதிப்பதெப்படி? என 28 கட்டுரைகளை அனுபவ ரீதியாக எழுதியுள்ளார். ஒரு குறள், ஒரு திரைப்பாடல், ஒரு குட்டிக்கதையென ஒவ்வொரு கட்டுரையிலும் சுவை குன்றாமல் எழுதியிருப்பது சிறப்பு. இந்நூலைப் படித்துப் பயன் பெறலாம்.