பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை தமிழுக்கு கொண்டு வரும் முயற்சியே இந்நுால். ஆங்கில இலக்கியத்தின் பொற்காலம் எனக் கருதப்படும் முதலாம் எலிசபெத் ஆண்ட, 16ம் நுாற்றாண்டே என்று இலக்கிய விமர்சகர்கள் கருதுகின்றனர். கலைகள், இலக்கியம் ஆகியவற்றை எலிசபெத் ஆதரித்த காலத்திலிருந்து, ரொமான்டிக் காலம் ஈறாக, பல்வேறு கால கட்டங்களில் உருவான இலக்கியங்களில் சிறந்தனவற்றை மொழியாக்கம் செய்துள்ளார் நுாலாசிரியர்.