நாட்டுப்புற இலக்கிய வடிவங்களில் முன்னைப் பழமைக்கும், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்குவது விடுகதை. ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியரே, ‘பிசி’ என்ற சொல்லால் விடுகதையைச் சுட்டியுள்ளார். மூத்த தமிழறிஞர்களான, ச.வே.சுப்பிரமணியன், ஆறு.ராமநாதன் ஆகியோர் வரிசையில் முருகேஷும் சேர்ந்துள்ளது பாராட்டுக்குரியது. ‘மண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்’ என்னும் தலைப்பில், அறிவுக்கு விருந்தாகும், 180 விடுகதைகளைத் தொகுத்துள்ளது, இந்நுாலுக்கு சிறப்பு சேர்க்கிறது.