முகப்பு » ஆன்மிகம் » பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு

பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு

விலைரூ.120

ஆசிரியர் : பேராசிரியர் தி.இராசகோபாலன்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பன்னிரு ஆழ்வார்களில், எம்பெருமானுக்குப் பொங்கும் பரிவு கொண்டு, பல்லாண்டு பாடியதால் விஷ்ணு சித்தர் – பெரியாழ்வார் என்று போற்றப்படுகிறார்.
ஆழ்வார்கள் இறைவனைத் தாயாகப் பாவித்து காக்க வேண்டி பாசுரங்கள் பாடினர்; ஆனால், பெரியாழ்வார் இறைவனுக்குத் தாமே தாயெனப் பாவித்து பாசுரங்கள் பாடினார் என்று கூறி,
அவரின் ஆன்மிக சிந்தனைகளை விளக்கும் நுால். அறிவின் திறனுக்குச் சான்றுகளாக உள்ளன.
செவ்விலக்கியம் படைப்போர் வழக்கு சொற்களையும், கொச்சை சொற்களையும் பயன்படுத்த மாட்டர் என்று கூறும் நுாலாசிரியர், பெரியாழ்வார் இவற்றையெல்லாம் பயன்படுத்தி பாசுரங்கள் செய்துள்ளார் எனக் கூறி விளக்குகிறார். இது, நுண்ணிய புலமைக்குச் சான்று.
பெரியாழ்வார் பாசுரங்களை விளக்கும் இடங்களில், பாரதியார், பாரதிதாசன் பாடல்களையும், நளவெண்பா, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பிற ஆழ்வார்களின் பாசுரங்களையும் மேற்கோள்களாகக் கூறியுள்ளார். ஆழ்ந்த அகன்ற அறிவாற்றலை உணர்த்துகிறது. தமிழர்கள் தவறாது படிக்க வேண்டிய நுால்.
டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us