மகாகவி பாரதி குறித்து தொகுக்கப்பட்டுள்ள நுால். பறவைகளை மென்மையாக கையாண்டார் பாரதி. ஒரு கணத்தில் மனைவி குறித்து, ‘நான் கொஞ்சம் கடிந்து பேசி விட்டேன். அப்படி பேசியிருக்கக் கூடாது; அவள் என்ன சொல்ல வந்தாள் என யோசித்திருக்கலாம்’ என்கிறார். ‘வெள்ளை முண்டாசு வாங்கி அணிவதற்கே காசு இல்லை. காசியில் பல வண்ணங்களில் துண்டு அணிவதை பார்த்தேன். எனக்கும் அது போல் அணிய ஆசை...’ என நண்பரிடம் குறிப்பிட்டுள்ள விபரமும் பதிவாகியுள்ளது. பாரதி குறித்த அரிய தகவல்கள் அடங்கிய நுால். – டி.எஸ்.ராயன்