முகப்பு » கதைகள் » ஒரு காதல் கதை

ஒரு காதல் கதை

விலைரூ.280

ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
காதல் கதை என்று ஆரம்பிக்கப்பட்டாலும், மனித உணர்வுகளை சொல்லுகின்ற கதை. அப்பா, மகன் உறவு வெகு யதார்த்தமாக சொல்லப்பட்ட விஷயம். எந்த தலைமுறையாக இருந்தாலும் தந்தை, மகன் பிரச்னைக்கு தீர்வு கிடையாது என்பதை அவர்களது வார்த்தைகள் விவரிப்பது சுவையான உணர்வு.
வாயும், இதயமும் எல்லாருக்கும், எல்லா நேரமும் ஒண்ணா இருக்காது என்பதற்கு தந்தை, மகன் உரையாடல் ஒரு சோறு பதமாக சொல்லலாம். மெத்த படித்த சீனியர் சிட்டிசன்களின் வடிகால் வங்கி என்பது ஓங்கி உச்சந்தலையில் அறைவது போல சொல்லப்பட்டிருக்கிறது. மனிதர்களுக்காக ஏங்கும் அந்த மனங்களின் புலம்பல் நம்மையும் வேதனைப்படுத்தும்.
கதையில் காதலைக் காணோமே என்று யோசிக்கும் நேரத்தில், எழுத்தாளரான வங்கி குமாஸ்தா அருண்குமார் கனவில் காதல் வருகிறது. அந்த காதல் உடையும் நேரத்தில், மனோதத்துவ டாக்டர் காதல் சோகத்திற்கு சிகிச்சை அளிக்கிறார்.
அங்கே தன் உண்மைக்காதலை சொல்கிறான்... அந்த மனோதத்துவ நிபுணரும் வெற்றியடைந்த தன் உண்மைக்காதலை பகிர்ந்து கொள்கிறார்... இப்போது அருண்குமாருக்கும் நம்பிக்கையூட்டுகிறார்... அந்த நம்பிக்கை உண்மையாகிறதா என்பதை கதையை முழுதும் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஒரு காதல் கதை என்றதும் ஓவர் ரொமான்ஸ்...சினிமாக் காதலாக இல்லாமல், நிஜக் காதலைப் போல மவுனத்தில் நிரம்பி, வார்த்தைகளுக்கு திரையிட்டு வாழ்ந்து காட்டியிருக்கிறது. அனைவரும் படிக்க வேண்டிய குடும்பக்கதை.
எம்.எம்.ஜெ.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us