இந்த நுால் கொரோனாவை மருத்துவ கண்ணோட்டத்தில் பார்ப்பதல்ல; மாறாக நாம் கடந்து சென்று கொண்டிருக்கும் கொரோனா காலத்தின் மீதான சமூக பார்வை.
மட்டற்ற சுதந்திரத்தில் இருக்கும் உலகம், கொரோனா என்ற பேரிடரால் எப்படி முடங்கி, அடங்கிப் போனது; அதனால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் என்ன; சமூக மாற்றங்கள் என்ன என்பது பற்றி எல்லாம் அலசியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் திருமலை.
கொரோனா காலத்தின் செய்தி தொகுப்பாக அல்ல; நிகழ்காலத்தின் கண்ணாடியாக நுாலை தந்திருப்பதால், காலம் கடந்தும் வரலாற்று பக்கங்களில் இடம் பெற்றிருக்கும்.
– ஜி.வி.ஆர்.,