இந்த நாவல், ஒரு காவல் துறை அதிகாரி எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்பதையும், அவரின் தவறான நடவடிக்கையால் பலர் பாதிக்கப்பட்டதையும் விளக்குகிறது.
அழகான காதல் கதையை, ‘க்ரைம்’ கலந்து நாவலாக தந்துள்ளார். போலீஸ் அதிகாரியால் பாதிக்கப்பட்ட ஒரு காவலரின் கதையையும், சர்ச்சில் பாடல் பாடுபவரின் காதல் கதையையும் அழகாக இணைத்து, எளிய நடையில் கதை பின்னப்பட்டுள்ளது.
‘தன் வினை தன்னைச் சுடும்’ என்ற கருத்தை, போலீஸ் அதிகாரி கதையில் வலியுறுத்தி, சுவை பட முடித்துள்ளார். – ராமலிங்கம்