முகப்பு » கட்டுரைகள் » தமிழ் இமயங்களை வணங்கி மகிழ்கிறேன்

தமிழ் இமயங்களை வணங்கி மகிழ்கிறேன்

விலைரூ.135

ஆசிரியர் : நல்லாசிரியர் ஏ.சி.சிவபாலு

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இமயமலை போல் வாழ்வில் சிறந்து விளங்கும் எழுவரைப் பற்றி சுவைபட எழுதப்பட்டுள்ள நுால்.  பெருந்தலைவர் காமராஜர், மாமனிதர் கக்கன், அன்னை தெரசா, கல்கண்டு தமிழ்வாணன், இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் மு.மேத்தா, அன்புப் பாலம் கல்யாணசுந்தரனார் ஆகியோரின் வாழ்க்கை நிகழ்வுகளை நிரல்பட விவரிக்கிறது.

தொண்டு உள்ளத்தோடு அன்னை தெரசா, தொழு நோயாளிகளுக்கு செய்த உதவியையும், பசியால் வாடிய பச்சிளம் குழந்தைகளை ஆதரித்த செயலையும் விவரிக்கிறது. கல்கத்தாவில் ஆற்றிய பணி, தொழு நோயாளிகளுக்கு இல்லம் வாங்கியது, ஆசிரியப் பணி, நர்ஸ் பணி என்று தெரசா வாழ்வில் தொண்டு என்ற தாரக மந்திரமே, அன்னை மடியில் என்ற கட்டுரை எடுத்தியம்புகிறது.

இப்படி ஒவ்வொருவரின் தியாக செயல்பாடு, சமூக பங்களிப்பு பற்றி சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. தகவல் களஞ்சியமாக விளங்கும் நுால்.
பேராசிரியர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us