முகப்பு » கட்டுரைகள் » வனப் பாதையில்

வனப் பாதையில்

விலைரூ.100

ஆசிரியர் : ஜீ.முருகன் ஸ்ரீநேசன்

வெளியீடு: அறம் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரன், பிரம்மராஜனின் நேர்காணல் மற்றும் ஆத்மாநாம், கோணங்கி ஆகியோரின் படைப்புகள் குறித்த தொகுப்பு நுால். ‘பாமர வாசகனுக்காக எழுதுகிறீர்களா...’ என்ற கேள்விக்கு, ‘பாமர வாசகனுக்காக எழுதவில்லை. தரமான வாசகர்கள், கவிஞர்களுக்காக எழுதுகிறேன்...’ என பிரம்மராஜன் பதில் அளித்துள்ளார்.

கோணங்கியின் புனைக்கதைகள் குறித்து, ‘வாசிப்பதற்கு சிரத்தை தருகிறது என்பதற்காக, அவர் எழுதுவதை புரியவில்லை என அவசரமாக நிராகரிப்பது தேவையற்றது...’ என்கிறது. ஆத்மாநாம் கவிதைகள் குறித்து, ‘அணு ஆயுதங்கள் குறித்த கவிதை, நாட்டு மக்களையும், இயற்கை வளத்தையும் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை காட்டுகிறது...’ என மதிப்பிடுகிறது. கதை, கவிதை எழுத முயற்சிப்போருக்கு பயன் அளிக்கும் நுால்.
டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us