முகப்பு » கட்டுரைகள் » முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் புலமை நலம்

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் புலமை நலம்

விலைரூ.100

ஆசிரியர் : முனைவர் பா.வளன் அரசு

வெளியீடு: கதிரவன் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய நுால்கள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். அவரது வாழ்க்கை வரலாறும், ஆற்றிய தமிழ்த் தொண்டும் சுருக்கமாக சுட்டப்பட்டுள்ளன. தமிழின் இனிமை, எளிமை, தனிமை, தொன்மை என தமிழின் சிறப்பை எளிமையாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்துள்ளது பற்றி எழுதப்பட்டுள்ளது.

திரிகடுகம், நான்மணிக்கடிகைக்குப் புதிய நோக்கில் எழுதிய உரை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மருந்துகள் என்ற நுாலில், தமிழ் மருந்துகள் காலத்தால் முந்தியும், திறமையால் மிகுந்தும், விலையால் குறைந்தும், கையாள்வதில் சிறந்தும் உள்ளதாக விளக்கப்பட்டுள்ளது. கி.ஆ.பெ., புலமை நலத்திற்குச் சான்றாகத் திகழும் நுால்.
புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us