தமிழ் பண்பாட்டு விழுமியங்களை ஆராயும் ஆய்வு நுால். தமிழ் மரபில், விளக்குகளில் அன்ன உருவம் பொருத்தப்பட்டுள்ளது குறித்து ஒரு கட்டுரை ஆராய்கிறது. அயோத்தி ராமாயணம் பற்றிய கட்டுரையில், பாண்டிய நாட்டில் ராமாயணக் கதைகளின் மூலத்திற்கு ராமகீர்த்தனம் அடிப்படையாக இருந்துள்ளது பற்றி ஆராய்கிறது.
தமிழில் பாரதங்கள் வளர்ந்ததை ஒரு கட்டுரை ஆராய்கிறது. பாரதத்தின் தாக்கத்தால் தமிழகத்தில் திரவுபதியம்மன் கோவில்கள் எழுந்தன என்றார். பாகவதப் பாரதம் சுவடிகளாகக் கிடைத்த வரலாற்றைக் குறிப்பிட்டு, அதை அம்மானை வடிவிலான காப்பியம் என்று கருத்துரைக்கிறார்.
அம்மச்சிக் கொட்டாரங்கள் பல புதிய செய்திகளைத் தருகின்றன. முகிலன் என்ற முகல் சர்தார் என்ற கட்டுரையும், நாயக்கப் படைத்தளபதி அழகப்பன் முதலியார் என்ற கட்டுரையும் பல புதிய தகவல்களை அறிமுகப்படுத்தியுள்ளன. யாளி, குதிரை வகைகள், மரம், குளவி பற்றிய நம்பிக்கைகள், தமிழர் வாழ்வியலில் எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்பதை ஆராய்கிறது.
–
ராம.குருநாதன்