முகப்பு » ஆன்மிகம் » ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்

ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்

விலைரூ.130

ஆசிரியர் : டாக்டர் இராம சிவசக்தி வேலன்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சீர்காழியில் 600 ஆண்டு களுக்கு முன் தோன்றிய அருளாளர் கண்ணுடைய வள்ளலார் இயற்றிய நுால். ஞானத்தால் விரைவாக முக்தி பெறலாம் என்ற மையக் கருத்தை கொண்டது. தத்துவங்களை முதலில் விளக்குகிறார். மதம் பிடித்த யானை கனவில், சிங்கம் வந்து அடக்குவது போல, சீடனின் ஆணவம், கன்மம், மாயையை அருட்கண் பார்வையால் சற்குரு போக்குவதாக அருளப்பட்டுள்ளது.

போலி குருக்களை தோலுரித்துக் காட்டுகிறது. உண்மை அறிவு பெறும்போது சீவனாகி, சிவம் ஆவதாகக் கூறுகிறார் மனித மனம். ஆன்மா, சிவத்துடன் கலப்பதே ஞான நிலை. மண், மலை, கடல், வானத்தை அளந்து அறிய முடியாது. அது போல் பரம்பொருளையும் அளிக்க இயலாது என்கிறது.

பேரம்பலத்தில் ஆடும் நடராஜர், சிற்றம்பலமாகிய ஆன்மாவிலும் நடனம் ஆடுகிறார் போன்ற வாசகங்கள் சிந்தனையில் ஆழ்த்தும். ஞானம் பெற வழிகாட்டும் ஆனந்தப் புதையல்.

முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us