முகப்பு » ஆன்மிகம் » திருவண்ணாமலை மகான்கள்

திருவண்ணாமலை மகான்கள்

விலைரூ.280

ஆசிரியர் : பா.சு.ரமணன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நினைத்தாலே முக்தி தரக்கூடிய பெருமையை உடையது திருவண்ணாமலை. சிவனே, மலையாகக் காட்சி அருளும் ஒரே தலம். சுற்றி வாழ்பவர்களுக்கு குருவாக அமைகிறது. ஆன்ம ஞானத்தை வேண்டியபடி தருகிறது.

தவ யோக நிலையை அடைந்த சித்தர்களும், மகான்களும், யோகிகளும் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு, தம் தவ ஆற்றலால் அருள்பாவித்து அவர்கள் தம் வாழ்க்கையை உயர்த்துகின்றனர். ஆன்மிக மறுமலர்ச்சியை உண்டாக்குகின்றனர்.

அத்தகைய மகான்களில் குறிப்பிடத்தக்க சிலர் பற்றி பேசுகிறது. பதினைந்தாம் நுாற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் சித்தர் இடைக்காடர், முதல் குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர், ஸ்ரீ அம்மணி அம்மாள், அருணகிரிநாதர், ஈசான்ய ஞான தேசிகர், விட்டோபா சுவாமிகள், சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது.

பகவான் ரமணர், ஞானானந்த கிரி சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், யோகி ராம்சுரத்குமார் வரை மகா ஞானிகளின் தெய்வீக வாழ்க்கை, உபதேசங்கள், நிகழ்த்திய அற்புதங்கள், அவர்களைப் பின்பற்றிய சீடர்கள் போன்ற தகவல்கள் சுருக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ள நுால்.

– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us