முகப்பு » ஆன்மிகம் » முருகா... ஆறு படையின் புராணக்கதை

முருகா... ஆறு படையின் புராணக்கதை

விலைரூ.120

ஆசிரியர் : பிரபு சங்கர்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
முருகனின் ஆறு படை வீடுகளைப் பற்றிய முழுமையான தொகுப்பு நுால். வீடு பேறு தரும் ஆறு படை வீடுகளின் வரலாறு, அவற்றின் தொன்மை, சுவாமியின் அலங்கார ரூபம், வீற்றிருக்கும் திருக்கோலம், கோவிலுக்கு செல்லும் வழி, அங்கு நடைபெறும் பூஜை முறைகளின் எண்ணிக்கை, கோவில் நடை திறந்திருக்கும் நேரம் மற்றும் திருவிழாக்கள் என தகவல்களை உள்ளடக்கிய வழிகாட்டி புத்தகம்.

கடற்கரையில் அமையப் பெற்றுள்ள ஒரேபடை வீடு திருச்செந்துார் தான். இங்கு, முருகனின் பாதத்தில் பெறப்படும் பத்ர விபூதி பிரசாதம் பிரசித்தம். பழநி மலைக்கோவிலில் போகர் சித்தர் உருவாக்கிய நவபாஷாண சிலை, அதன் சிறப்புகள் விளக்கப்படுகின்றன.

மலையில்லா தஞ்சையில் சுவாமி மலையாய் வீற்றிருக்கும் முருகன், ஆண்டில் இரு முறை பிரமோற்சவம் நடைபெறும் திருத்தணி கோவில், அழகர்மலை முருகன் கோவில் என சிறப்புகளை விளக்குகிறார். முருகனை நினைந்து உருகுபவர்களுக்கு கவசமாக விளங்கும்.

திரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us