முகப்பு » ஆன்மிகம் » கண்ணன் என்னும் காதல் தெய்வம் பகவத் கீதை – ஒரு புதிய

கண்ணன் என்னும் காதல் தெய்வம் பகவத் கீதை – ஒரு புதிய விளக்கம் (பாகம் – 1)

விலைரூ.300

ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இறைவன் மனிதனுக்கு எழுதிய காதல் கடிதம்தான் கீதை. அதன் சாரம் அன்பு என்பதை நிலைநாட்டும் நுால். பகவத் கீதைக்கு தமிழில் தலைப்பு, ‘கண்ணனின் முத்தம்’ என்று தான் வைக்க வேண்டும் என்கிறார் நுாலாசிரியர். இந்த கருத்தை வலியுறுத்தும் கற்பனை கதைகளையும், நிகழ்வுகளையும் விவரித்திருப்பது சிறப்பு.

துாய அன்பின் வெளிப்பாடு உண்மை வழிபாடு. வெறித்தனமாகக் காதல் கொண்டிருக்கும் தெய்வம், ‘நீ எதுவும் செய்ய வேண்டாம்; என்னிடம் வந்தால் போதும்’ என்று பறைசாற்றிய கீதையின் சாராம்சம் அன்பாகத்தானே இருக்க முடியும்.

நாத்திகருக்கும், பகுத்தறிவுவாதிக்கும் அருள் பொழியும் அன்பின் வடிவம் இறைவன். கீதையில், ‘இயல்புக்கு ஏற்றாற்போல் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். அதை முதலில் செய்யுங்கள்’ என்று தான் கேட்டுக் கொள்கிறான் கண்ணன். இயல்புக்கு எதிரான வேலையில் ஈடுபட்டால் தீங்கு விளையும் என்று கரிசனத்தோடு சொல்கிறான். இவ்வளவு அக்கறை கொண்ட கண்ணனைக் காதல் தெய்வம் என்று அழைப்பதில் தவறில்லை.

 – இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us