கூட்டு குடும்ப வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாவல். தந்தை, மகன் பிணைப்பை, பாசம், ஏக்கம் கலந்து சொல்கிறது. பெண்களுக்கு உரிய ஆசை, ஏக்கங்களை விவரித்து, ஆணின் உயர்வுக்கு இணையர் எவ்வளவு முக்கியம் என உணர்த்துகிறது.
கதாபாத்திரங்கள், நம்பிக்கை விதைகளாக வருகின்றன. கதையின் காலக்கட்டத்தில் நடந்த கிடாவெட்டு நிகழ்வு, இறந்த வீட்டின் சூழல், மொய் வைத்தல் போன்றவை தற்போதைய சூழலுடன் பொருந்துமா என யோசிக்க வைக்கிறது. அறத்தின் வழி நின்று வாழ்க்கையை பேசும் நாவல்.
–
டி.எஸ்.ராயன்