தமிழக கோவில்கள் பாரத கலாசாரம் தமிழ்ப்பண்பாட்டின் சங்கமமாகத் திகழ்கின்றன. வேதாகம புராணங்கள், வான சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம், நுண்கலைகள், படிமக்கலைகள் மற்றும் இயல், இசை நாடகத் தமிழ் ஒருங்கிணைந்த ஒரு வெளிப்பாடே கோவிற்கலை.
இறைவழிபாட்டின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை பற்றி எடுத்துக் கூறுகிறது.
கோவிற்கலையின் பொதுக்கூறுகளும் சைவ, வைணவ சமயக் கூறுகளும் தனித்தனியாக விளக்கப்பட்டுள்ளன. கோவில் பற்றிய ஆய்வாளர்கள், தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் பணிவாய்ப்பு போன்ற போட்டித் தேர்வு, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுபவர்களுக்கு மிகவும் உதவும். பொதுவான செய்திகளை அறிந்து கொள்ள உதவும் நடைமுறை நுால்.
–
இளங்கோவன்