உள்ளூர் கோவில்களின் மகத்துவம் குறித்து எழுதப்பட்டுள்ள நுால். சென்னை பாடி, கொரட்டூர் பகுதி களில், 29 கோவில் சிறப்புகள் பதிவிடப்பட்டுள்ளன.
அருகே உள்ள கோவில்களில் இத்தனை சிறப்பா என உணர வைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. தெளிந்த நீரோடை போன்ற எளிய நடையில் அமைந்துள்ளது. பண்டிகை காலத்தில் எந்த கோவிலில் என்ன நிகழ்ச்சி என்பதை அறிந்து கொள்ள உதவும்.
விநாயகர், சுப்ரமணியர், ஈஸ்வரர், பெருமாள் மற்றும் அம்மன் கோவில்கள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கோவில் வரலாற்றுடன் சிறப்பு அம்சங்களும் எளிதாக விளங்கும் வகையில் தொகுத்து தரப்பட்டுள்ளது. ஆர்வமூட்டும் தலைப்புகளுடன், உள்ளூர் கோவில்கள் பற்றிய விபரங்களை தெரிவிக்கும் நுால்.
– ஒளி