இமயமலையில் உள்ள திருக்கயிலாயத்துக்கு ஆன்மிக யாத்திரை சென்ற அனுபவத்தை படங்களுடன் விவரிக்கும் நுால். பயணம் செய்ய விரும்புவோருக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது. கயிலாயத்துக்கு யாத்திரை செல்லும் எண்ணம் வந்தது முதல் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குழுவாக பயணம் செய்யும் போதுள்ள அனுகூலங்கள், அதற்கேற்ற முன்னேற்பாடுகள் பற்றி எல்லாம் விபரமாக விளக்கப்பட்டுள்ளது.
பயண டிக்கெட் முன்பதிவு உட்பட தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பயணத்தில் பார்த்த இடங்களையும், காட்சிகளையும் மிக சுவாரசியமாக நேரில் பார்ப்பது போல் வர்ணித்துள்ளார். வண்ணப் படங்கள் அவற்றுக்கு மெருகூட்டுகின்றன. இமயமலையில் உள்ள புனித இடத்தை எழுத்தில் கண் முன் காட்டும் நுால்.
– ஒளி