முகப்பு » பெண்கள் » பெண்களைப் போற்றுவோம்

பெண்களைப் போற்றுவோம்

விலைரூ.150

ஆசிரியர் : எடப்பாடி அழகேசன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: பெண்கள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சிறுகதைகள், புதினங்கள் வழியே அறியப்பட்டவர் முழுக்க பெண்களின் சிறப்பை, மாண்பை, தனித்துவத்தை, மேன்மையை பறைசாற்றி எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால்.

திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்தொன்றில் சிக்கி, மனைவி அடைந்த ரணத்தை, ‘அன்பு ராணி’ என்ற கவிதையில் நுட்பமாக சொல்லப்பட்டுள்ளது. தாயின் இறுதிச்சடங்கை முடித்த நேரத்தில் தோன்றிய வலியை, ‘கருவறை வென்ற நாள்’ என்ற கவிதையில் இறக்கி வைத்துள்ளார்.

போலி பெண்ணியவாதி செயல்கள் குறித்தும், மாதவிடாய் வேதனை குறித்தும், கல்வியின் பலம் குறித்தும், தலைவியும், நடிகையும் எவ்வாறு பெயர் பெற வேண்டும் என்பது குறித்தும், பேத்தி முதல் பாட்டி வரை உறவுகளின் உன்னதம் குறித்தும் கவிதை வடித்துள்ளார்.

– சையது

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us