விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்து தெய்வ பக்தியில் சங்கமிப்பதே ஆண்டாளின் திருப்பாவை என விளக்கும் நுால். பாசுரங்களில் பின்புலத்தில் வியக்கத்தக்க அறிவியல் உண்மைகளை கோடிட்டுக் காட்டுகிறது.
மழை, மேகம், பறவையினங்கள் என இயற்கை அம்சங்களில் இறைவனைக் கண்டு வணங்கும் பக்தி எளிமையை சுட்டிக்காட்டுகிறது.
வேதங்களும் கீதையும் உணர்த்தும் ஆன்மிக ஞானம் திருப்பாவையில் புதைந்துள்ளதை அறிய முடிகிறது. இறை அவதாரத்தின் வரலாறை ஒற்றை வரியில் கூறிய ஆண்டாளின் சொல்லாட்சி சிறப்பு போற்றப்படுகிறது.
அள்ளிப் பருக வேண்டிய அமுதம்.
-– தி.க.நேத்ரா