நம்நாட்டில் வாழ்ந்திருந்த முனிவர்களை ஒருவிதத்தில் விஞ்ஞானிகள் என்றே கூறவேண்டும். கேள்விகளின் விடையை அறிய அவர்கள் செய்த சோதனை முறை தியானம்!
முனிவர்கள் தங்களுடைய சொந்த அனுபவங்களின் மூலமும், தபஸ் மூலமும் கண்ட உண்மைகளைச் சொல்கிறது கேனோபநிஷத். ஆதி மூலக் கடவுளான பிரம்மம் தனி மனிதனிடத்திலும் ஒவ்வொரு ஜீவராசியிலும் இருக்கிறது. நம் மனத்திலுள்ள அறியாமையைப் போக்கினால் நாமே இந்தக் கடவுளிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல என்பதை அறிந்துகொள்ளலாம்