சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த போது நிகழ்ந்ததாக பதிவு செய்கிறது.
நாவல் கதாநாயகன் குமாரஸ்வாமி மாணவப் பருவத்தில் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வேலுார் சிறையில் அடைக்கப்படுகிறான். சிறையில் உடல்நலம் கெட்டு காச நோய் பரிசாக கிடைக்கிறது.
விடுதலையாகி வீட்டுக்கு வரும்போது செய்தித்தாளில் குமாரஸ்வாமியின் தியாக உணர்வு கண்டு பயணியர் சிலாகிப்பதை கேட்கிறான். அடையாளம் இழந்தவன் நோயால் இருமியதை தொந்தரவாக கருதுவதையும் கவனிக்கிறான். அதில் தன் மீது கருணை காட்டியவளை அவன் மனம் நாடுவது உருக்கமாக படைக்கப்பட்டு உள்ளது. போராட்டப் பின்னணியில் தியாகி திருப்பூர் குமரன் வாழ்வை நினைவூட்டும் நாவல்.
– புலவர் சு.மதியழகன்