ஆத்ம ஞானம் பெறுவதற்கு, அவசியம் படிக்க வேண்டிய அருமையான நுால். அத்வைத சித்தாந்தத்தை சிறப்பாக விளக்குகிறது.
வடமொழியிலிருந்து பிச்சு சாஸ்திரிகளால் தமிழாக்கம் செய்யப்பட்ட ரிபு கீதைக்கு விளக்கவுரை தரப்பட்டுள்ளது. காண்பவை அனைத்தும் பிரம்மம் என உரைக்கிறது. அறியாமையை அகற்றினால் மட்டுமே பிரம்மத்தை காண முடியும் என விளக்கம் தருகிறது. கடவுள் எங்கோ இருப்பதாக எண்ணக் கூடாது; நாமே கடவுளின் அங்கம் என்பதை புரிய வைக்கிறது.
நினைவை நிறுத்தி விடும் நிலைதான் மவுனம் என பொருள் விளக்கம் சொல்கிறது. நானும் பரம்பொருளே என உணர்வதே ஞான நிலை என்பதை எடுத்துரைக்கிறது. அறியாமையை அகற்றி ஆத்ம ஞானம் பெறுவதற்கு வழிகாட்டும் அற்புத நுால்.
– டாக்டர் கார்முகிலோன்