வாழ்க்கையின் சுவையை என்ன என்றே அறியாத சமூகத்தை பற்றிய நாவல். சுதந்திரமடைந்து, 20 ஆண்டுகளுக்கு பின் நிகழ்வுகள் நடப்பதாக படைக்கப்பட்டுள்ளது.
கதாபாத்திரங்கள் வழியாக நேர்மறை எண்ணம் கொண்டோருக்கு ஏற்படும் துன்பம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கணவரை இழந்த பெண், இரு மகள்களுடன் வாழ்வை நகர்த்தும் போது, உறவினர்களால் சந்தித்த இன்னல்களும், நட்புகளால் கிடைத்த ஆறுதலும் கூறப்பட்டுள்ளது. துணையின்றி வாழும் பெண் சந்திக்கும் துன்பங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
கிராமங்களின் நிலை, விவசாய வழிமுறை, கூலி வேலையில் சிரமம், தீண்டாமை கொடுமை, அதிகார வர்க்கம் பணிய வைப்பது, வேலை வாங்குவது போன்ற விவகாரங்கள் பேசப்பட்டுள்ளன. சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில், கிராம வாழ்வை அழகாக பதிவு செய்துள்ள நாவல்.
– முகில்குமரன்