பிரபல பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
வம்புக்கு அலைவோர் இப்போது அதிகம் இருக்கின்றனர். இலவசமாக தருவதை வாங்கியே பொழுதை போக்குவதற்கு அலைகின்றனர் என்பது போன்ற நிதர்சன விவரிப்புகள் கதைகளுக்கு சுவாரசியம் தருகின்றன. மனைவியை பறிகொடுத்த கணவனுக்கு ஒரு நீதி, கணவனை பறிகொடுத்த மனைவிக்கு ஒரு நீதியா என நியாயம் கேட்கிறது.
ஒருவரை கெடுத்து முன்னேற வேண்டாம் என்கிறது, ‘நன்றே செய்க’ கதை. தடம் புரண்டு ஓட தயாராகும் இளைஞர்களை நேர்வழிப்படுத்தும் அனுபவ பாடங்கள் கதைகளாக ஆகியுள்ளன. வாழ்வில் உயர்த்திய தொழிலை மதிக்க வேண்டும் என்பது போன்ற நீதியையும் புகட்டுகிறது. எந்த காலத்திற்கும் பொருந்தும் கதைகளின் தொகுப்பு நுால்.
– சீத்தலைச்சாத்தன்